ஆசியர்கள் மீது அவதூறு பரப்பிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்- சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம். புகார் அளித்த மாணவருக்கும் அந்தப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் கடந்த ஒரு வருடமாகவே பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளது. மாணவர் தரப்பிலிருந்து குறைந்த மதிப்பெண் போட்டதாக கூறி மாணவனின் தந்தை பள்ளி ஆசிரியரை அடித்து உள்ளார்.அடிதடி வழக்கு காவல்நிலையம் வரை சென்றுள்ளது.மாணவர் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் சென்றதால், கடந்த காலங்களில் தலைமையாசிரியர் காவல் துறையிடமிருந்து தலைமறைவாக இருந்ததாகவும்,மாணவரின் தந்தை சூலூரில் பணிபுரிவதால் நேரடியாக பள்ளிக்கு சென்று பள்ளி ஆசிரியை அடித்ததாகவும், குறிப்பிட்ட மாணவர் ஒரு பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் பத்தாவதில் பெயில் ஆனதால் மீண்டும் ஒருமுறை பத்தாவது தேர்வை எழுதியுள்ளதாகவும், ஆனால் இன்றுவரை அந்த மாணவரின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த மாணவர் பதினொன்றாம் வகுப்பில் சென்று அமர்ந்து கொண்டிருப்பதாகவும் அவ்வப்னோது பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கி வருவதாகவும் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இந்த மாணவர் மீது புகார் தெரிவித்துள்ளனர். அதனால் தீர விசாரித்து கொள்ளவும்.
#students
#kendriya vidyalaya students
#sulur
#sulur kV school,
0 Comments